Saturday, February 14, 2009

சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!!!!


ஜாதியில்லை மதமுமில்லையென்று
யார் சொன்னது?
உன் காதலுக்கு
ஜாதியுமுண்டு மதமுமுண்டு
இதயம் மட்டுமில்லை!!
காரணம் நீ
கண்களைத் தந்து
இதயத்தை
வாங்கிக் கொண்டவன்...!!!


-->>@@@இராஜேஸ் அக்காவுக்காக@@@>>--


என் உளறலையெல்லாம் கவிதையென்று நம்பும் பதிவுலக நண்பர்களுக்கு இனிய அன்பர் தின வாழ்த்துகள் :-)

19 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல கவிதை.. காதலர் தின நல்வாழ்த்துக்கள்..

Vijay said...

அன்பர் தி்னம் - அட, இது கூட நல்லா இருக்கே :-)

தாரணி பிரியா said...

:)

அன்பர் தி்ன நல்வாழ்த்துக்கள்

ரவி said...

good

Unknown said...

அக்கா கலக்கல்... பின்றீங்க :))

Anonymous said...

//கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
நல்ல கவிதை.. காதலர் தின நல்வாழ்த்துக்கள்..//

வணக்கம் கார்த்திகைப் பாண்டியன். பெயர் ரொம்ப அழகாக இருக்குங்க :-) கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!!!

Anonymous said...

//விஜய் கூறியது...
அன்பர் தி்னம் - அட, இது கூட நல்லா இருக்கே :-)//

நன்றி விஜய் :-)

Anonymous said...

// தாரணி பிரியா கூறியது...
:)

அன்பர் தி்ன நல்வாழ்த்துக்கள்//

தங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் பிரியா :-)

Anonymous said...

//செந்தழல் ரவி கூறியது...
good//

நன்றிங்க :-)

Anonymous said...

//ஸ்ரீமதி கூறியது...
அக்கா கலக்கல்... பின்றீங்க :))//

:-) நிஜமாகவா? நன்றி செல்லம்!!!

Mohan R said...

நல்ல கவிதை...

Maddy said...

ஏதோ வேறு விதமாக படித்தால் வந்த குழப்பம் இங்கே....

காதலுக்கு சாதியுண்டு
ஆண் ஜாதியும் பெண் ஜாதியும்
மதமும் உண்டு
சம்""மதம்" மும் உண்டு
இதயம் மட்டுமில்லை!! உண்மை தான்
காரணம் அது களவு போனதால்!!

வாழ்த்துக்கள் எந்நாளும் இன்புற்று இருக்க

Sanjai Gandhi said...

//நீ
கண்களைத் தந்து
இதயத்தை
வாங்கிக் கொண்டவன்...!!!//

எந்தக் கடைல இந்த மாதிரி எல்லாம் எக்ஸ்சேஞ் ஆஃபர் குடுக்கறாங்க.. ரொம்ப புதுசால்லா இருக்கு.. நல்லா பன்றாங்கய்யா பிசினசு.. :))


...சரி சரி.. மொறைக்க வேணாம்..உண்மையாவே கவிதை ரொம்ப நல்லா இருக்கு... :)

Anonymous said...

உன் இதயத்தை வாங்கி...
உன்னை மரண படிக்கையில் படுக்க வைக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை...
உன்னுடன் 7 பிறவிகளிலும் வாழ நினைக்கிறேன்...
இதோ உன் இதயம் ..
உன்னிடமே தருகிறேன்...

- தமிழன் -

மிக அருமையான கவிதை.

Anonymous said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள்

நான் said...

நன்றிங்க கவிதை நன்று

Poornima Saravana kumar said...

நல்ல கவிதை:)

A N A N T H E N said...

//ஜாதியில்லை மதமுமில்லையென்று
யார் சொன்னது?//

நான் இல்லிங்கோ...



//உன் காதலுக்கு
ஜாதியுமுண்டு மதமுமுண்டு
இதயம் மட்டுமில்லை!!
காரணம் நீ
கண்களைத் தந்து
இதயத்தை
வாங்கிக் கொண்டவன்...!!!//

சோ, இதயம் இல்லாத ‘அவன்’கிட்ட உங்க இதயத்த கொடுத்திட்டு... இப்போ நீங்க இதயம் இல்லாம இருக்கிங்களா? :D

pirainudal said...

vaarthaigalai kavidaiyay thandu idayathai eduthukondavar neengal