நெருக்கங்களால் இதயம்
ததும்புகின்ற வேளையில்...
முன்னொரு நாள்
மேகங்களில் உரசி
சிறகொடிந்தப் போது
கட்டுப் போட்ட வேடனின்
ஸ்பரிசம் அடைமழையாய்
சிலிர்த்தெழுகிறது...
மழையில் நனைந்துக் கொண்டே
தீக்குள் விரலை விடும்
இலையுதிராக் காலத்தில்
அவனைச் சேர்வதாய்ச் சொல்லிச்
சென்ற வார்த்தைகள்...
இன்று மழையில்
நனையாதுதீக்குளித்தாலும்
ஃபீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழுந்துக் கொல்கிறது!!!
[இன்று பிறந்தநாள் காணும் அன்புத் தோழி
இந்தப் பாசம்... இந்த நேசம்... இந்த நட்பு... வாழ்வின் எல்லை வரை வேண்டும்!!!