Sunday, September 20, 2009

கவிதையைப் போல்!!!!

முற்றுப் பெறும்
எல்லா கணங்களையும்
அவனுக்காய் சேர்த்து வாழும் அவள்,
அவன் கவிதைகளில் கூடு கட்டி
மேகம் வரைந்திருந்தாள்....

மேகங்கள் கரையும்
ஒரு மழைக்காலத்தில்
அவளுக்காய் அவன்
விதைத்துச் சென்ற
கவிதைப் பூக்கள்
காய்ந்துப் போயிருந்தன...

மேகங்களை அவன் தேடிச்
சேர்க்கும் முன்பே
அவள் தொலைந்துப் போயிருந்தாள்
கரைந்துப் போன
அவனுடைய கவிதையைப் போல்!!!!