எப்பொழுது முடியுமென சோம்பித் திரிந்த தருணங்களும்...
எப்பொழுது இது நீளுமென ஏங்கித் தவித்த நாட்களும்... எல்லாமுமாய் சேர்ந்து இதுவரையிலும் கிறுக்கிய படிமங்களை மீள்பார்வையிட... எதுவுமேயில்லை என்ற சுயத் தேடல் அவசிய விடுபடுதலுக்கு தயாராக்கிக் கொண்டது மனதை!!!
விடுபடுதலோ விடைப்பெறுதலோ ஏதாவது புது பரிமாணத்தின் சாத்திய கூறுகள்தான். விடுபடுவதைவிட விடைபெறுதலின் வலி அதிகமென்று யாரும் சொல்லாமலே அறிந்துக் கொண்ட தருணங்கள் பல... சொல்லி மீள்வதல்ல வாழ்க்கை!!!
இந்த மாதத்துக்கான பதிவுகளை அவசரமாய் பதிவிட்டாலும் நிரம்பவில்லை மனது....!! ஆக கோடிட்ட இடத்தை நிரப்புவதைப்போல நாள்காட்டியின் நாட்களை வட்டமிட்டபடி அடுத்த பிரிவுக்கு தயாராகிக் கொள்கிறேன். பிரிவுகள் வலியல்ல அதுவொரு தேடல்...!!!
தேர்வு...விடுமுறை...பயணம்.... இன்னும் பிற சுயத் தேவைக்காக இந்த விடைபெறுதல் அவசியமென தோன்றுகிறது. நற்செய்தியோடு அனைவரையும் மீண்டும் சந்திக்கும் வரை...
பிரியமுடன் ...!!!
Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts
Thursday, June 25, 2009
Friday, May 29, 2009
மீண்டும் வாய்க்குமா?
தோளில் சாய்ந்துச் சண்டைப் போடவும்
கைகள் கோர்த்துச் சாலை நடக்கவும்
தலைமுடி கலைத்து வாரி விடவும்
நீ அருந்திய தேநீர் திருடிப் பருகவும்
நெற்றி...கன்னம்...மீசை உறுத்தவும்
புஜத்தில் சரிந்து உறங்கிக் கொள்ளவும்
மீண்டும் வாய்க்குமா
உன் மூச்சுக் காற்று உரசிய
அதே ஞாயிறு??
29.05.2009
Friday, December 12, 2008
அன்பில்லாத உனக்கு!!!
அப்படித்தான் அழைக்கத்
தோன்றுகிறது உன்னை...
எனக்குள் வன்முறையத் தூவிச்
சென்றாய் அன்று எதுவுமே
சொல்லாமலே...
இன்றோ என்னை
சந்தோஷிக்க விரும்புகிறாய் நட்பாய்...
இருந்தும் உனக்குத்
தெரியாமலே
உனக்கு முன்பே நான்
வாழ ஆரம்பித்து விட்டேன்...
தினமும் மழையில்
நனைகிறேன்...
இளையராஜாவோடு காற்றில்
மிதக்கிறேன்...
தோழியோடு சேர்ந்துச் சிரிக்கிறேன்...
இதுவரை பார்க்காத படங்களையெல்லாம்
விரும்பிப் பார்க்கிறேன்...
ம்ம்ம்ம்...
ஆயினும் இதுவரை
இன்றுவரை நிகழாத
சாத்தியக்கூறுகள்தான் அவை...
தனிமைகூட என்னிடம்
தனித்துத்தான் நிற்கிறது!!!
அன்று தனிமையில் என்னிடம் நீ சொல்லி வைத்த
வார்த்தைகள்....
"என்னைக் கிள்ளி உன்னை அழ வைப்பேன்"
பிரிவுகள் சாஸ்வதமல்ல... ஏன் நீ...நான்... யாருமே
"அன்பின் அர்த்தங்கள் சில நேரங்களில் பிரிதலிலும் இருக்கக்கூடும்" - கவிதாயினி
பி.கு: அன்பின் பதிவுலக மக்கட்கு, இது கவுஜ, கவிதை என்று நான் வகைப்படுத்தவில்லை :-P அதனால் தைரியமா நீங்க கும்மி அடிக்கலாம் :-)
தோன்றுகிறது உன்னை...
எனக்குள் வன்முறையத் தூவிச்
சென்றாய் அன்று எதுவுமே
சொல்லாமலே...
இன்றோ என்னை
சந்தோஷிக்க விரும்புகிறாய் நட்பாய்...
இருந்தும் உனக்குத்
தெரியாமலே
உனக்கு முன்பே நான்
வாழ ஆரம்பித்து விட்டேன்...
தினமும் மழையில்
நனைகிறேன்...
இளையராஜாவோடு காற்றில்
மிதக்கிறேன்...
தோழியோடு சேர்ந்துச் சிரிக்கிறேன்...
இதுவரை பார்க்காத படங்களையெல்லாம்
விரும்பிப் பார்க்கிறேன்...
ம்ம்ம்ம்...
ஆயினும் இதுவரை
இன்றுவரை நிகழாத
சாத்தியக்கூறுகள்தான் அவை...
தனிமைகூட என்னிடம்
தனித்துத்தான் நிற்கிறது!!!
அன்று தனிமையில் என்னிடம் நீ சொல்லி வைத்த
வார்த்தைகள்....
"என்னைக் கிள்ளி உன்னை அழ வைப்பேன்"
பிரிவுகள் சாஸ்வதமல்ல... ஏன் நீ...நான்... யாருமே
"அன்பின் அர்த்தங்கள் சில நேரங்களில் பிரிதலிலும் இருக்கக்கூடும்" - கவிதாயினி
பி.கு: அன்பின் பதிவுலக மக்கட்கு, இது கவுஜ, கவிதை என்று நான் வகைப்படுத்தவில்லை :-P அதனால் தைரியமா நீங்க கும்மி அடிக்கலாம் :-)
Subscribe to:
Posts (Atom)