
முதன் முதலாய் ஏதோவொரு இதழில் உன் முகம் பார்த்த ஞாபகம்...
மீண்டும் உன் குரல் கேட்டதில் ஏதோ சுவாரசியம்...
நாளெல்லாம் தேடி மீண்டும் உன் முகம் பார்க்கிறேன் பழையது என்று எறிந்துவிட்ட இதழை...
அம்மாவின் குறுகுறுப்பு பார்வையை தவிர்க்க
முகம் மூடுகிறேன் உன் நிழல் தாங்கி வந்த இதழில்...
அடுத்த கணம் ஏதோ தவிப்பு... உன் முகம் காண்பது எப்போது?
என்னை நானே கிள்ளிக் கொள்கிறேன்...
பலமுறை உன் எண்களை அழுத்துவதாய் எண்ணி அழுத்தாமலே என்னில் தேய்கிறேன்...
கடைசியாய் உன்னை அழைக்கிறேன்...
மறுமுனையில் உன் குரல்...
ஆங்கிலம் கலவாத வணக்கத்தில் உறைந்துப் போகிறேன் நான்...என்னையுமறியாமல்
துவண்டுப் போய் தொலைப்பேசியும் நழுவுகிறது...
நழுவிய பேசியை... பேசாமலே வைத்து விட்டு வந்து வெறுமையாய் வெறிக்கிறேன்
நழுவிய பேசியை... பேசாமலே வைத்து விட்டு வந்து வெறுமையாய் வெறிக்கிறேன்
வானவெளியை...
தொலைவில் தொலைப்பேசியின் அலறல்...ஓடி வந்து எடுத்து 'ஹலோ' என்கிறேன்
தொலைவில் தொலைப்பேசியின் அலறல்...ஓடி வந்து எடுத்து 'ஹலோ' என்கிறேன்
மென்மையாய்...
மறுமுனையில் உன் குரல் இனிமையாய்...
சாதாரண வணக்கத்தில் கூடவா இத்தனை இனிமை...
வியக்கிறேன் என்னில் ஆழ்ந்தப்படி...
உன் குரல் என்னை நிஜவுலகிற்கு கட்டி இழுக்கிறது...
'மன்னிக்கவும் தவறாக அழைத்துவிட்டேன் 'தன்நெஞ்சறிந்த பொய் சொல்கிறேன் உன் குரலை
மறுமுனையில் உன் குரல் இனிமையாய்...
சாதாரண வணக்கத்தில் கூடவா இத்தனை இனிமை...
வியக்கிறேன் என்னில் ஆழ்ந்தப்படி...
உன் குரல் என்னை நிஜவுலகிற்கு கட்டி இழுக்கிறது...
'மன்னிக்கவும் தவறாக அழைத்துவிட்டேன் 'தன்நெஞ்சறிந்த பொய் சொல்கிறேன் உன் குரலை
என்னுள் ஒளித்தவாறு...
மீண்டும் உன் குரல் கேட்கும் ஆர்வத்தை பிடிவாதமாய் இழுத்துப் பிடித்துக் கொண்டே கட்டிலில் சாய்கிறேன்...
தூக்கம் என்னிடம் காயானது...
நாட்களை உன் நினைவில் தொலைத்தவாறு உயிர் வாழ்கிறேன்...
காலம் என்னிடம் கண்ணாமூச்சி ஆடுகிறது...
உன் வீட்டு திருமண அழைப்பிதழை என் கையில் திணித்தவாறு...
உலகம் சிறியது என்று உன்னால் உணர்த்தப்படுகிறேன்...
உன் சொந்தம் என் உயிர் நட்பானது எப்போது?
வியக்க வழியின்றி கைநழுவுகிறது அழைப்பிதழ்...
என் கனவை போல...
நழுவிய இதழை நடுக்கத்தோடு கையில் எடுக்கிறேன்...
என் கனவை காலில் மிதித்தவாறு...
அப்போதே உடைந்துப் போக மனமின்றி...
பிறகு பார்ப்பதாய் கூறி எடுத்து வைத்துக் கொள்கிறேன்...
இரயிலுக்கு காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் பாறையாய் கணக்கிறது…என்னை நானே
மீண்டும் உன் குரல் கேட்கும் ஆர்வத்தை பிடிவாதமாய் இழுத்துப் பிடித்துக் கொண்டே கட்டிலில் சாய்கிறேன்...
தூக்கம் என்னிடம் காயானது...
நாட்களை உன் நினைவில் தொலைத்தவாறு உயிர் வாழ்கிறேன்...
காலம் என்னிடம் கண்ணாமூச்சி ஆடுகிறது...
உன் வீட்டு திருமண அழைப்பிதழை என் கையில் திணித்தவாறு...
உலகம் சிறியது என்று உன்னால் உணர்த்தப்படுகிறேன்...
உன் சொந்தம் என் உயிர் நட்பானது எப்போது?
வியக்க வழியின்றி கைநழுவுகிறது அழைப்பிதழ்...
என் கனவை போல...
நழுவிய இதழை நடுக்கத்தோடு கையில் எடுக்கிறேன்...
என் கனவை காலில் மிதித்தவாறு...
அப்போதே உடைந்துப் போக மனமின்றி...
பிறகு பார்ப்பதாய் கூறி எடுத்து வைத்துக் கொள்கிறேன்...
இரயிலுக்கு காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் பாறையாய் கணக்கிறது…என்னை நானே
தேற்றிக் கொண்டே...
அழைப்பிதழை கையில் எடுக்கிறேன்…
அதற்குள் இரயிலும் விரைவாய் வந்துவிட...
மீண்டும் என் கைப்பையில் தஞ்சம் புகுகிறது உன் வீட்டு அழைப்பிதழ்...
விரைவு இரயிலைவிட விரைவாய் தடதடக்கும் இதயத்தை கட்டுப்படுத்திக் கொண்டே
அழைப்பிதழை கையில் எடுக்கிறேன்…
அதற்குள் இரயிலும் விரைவாய் வந்துவிட...
மீண்டும் என் கைப்பையில் தஞ்சம் புகுகிறது உன் வீட்டு அழைப்பிதழ்...
விரைவு இரயிலைவிட விரைவாய் தடதடக்கும் இதயத்தை கட்டுப்படுத்திக் கொண்டே
திறக்கிறேன் அழைப்பிதழை...
நெஞ்சுக்குழிக்குள் ஏனோ இனிய கலவரம்...
கன்னத்தில் வழியும் கண்ணீரை யாருமறியாமல் மறைக்கிறேன்...
அருகில் பிஞ்சு விரலொன்று என் கன்னம் தடவுகிறது விளையாட்டாய்...
அந்த பிஞ்சு மழையின் விளையாட்டில் நனைந்துருகி என் நெஞ்சம்
நெஞ்சுக்குழிக்குள் ஏனோ இனிய கலவரம்...
கன்னத்தில் வழியும் கண்ணீரை யாருமறியாமல் மறைக்கிறேன்...
அருகில் பிஞ்சு விரலொன்று என் கன்னம் தடவுகிறது விளையாட்டாய்...
அந்த பிஞ்சு மழையின் விளையாட்டில் நனைந்துருகி என் நெஞ்சம்
நெகிழ்கிறேன்...இதைவிடவா ஒரு ஆறுதல் வேண்டும்?
கடவுள் மீது நம்பிக்கை கூடிப்போகிறது...
நிம்மதியாய் மூச்சுவிடுகிறேன் உன் வீட்டு அழைப்பிதழை நெஞ்சில் அணைத்தவாறு...
ஆனாலும் ஆண்டவனுக்கு அன்பாய் ஒரு வேண்டுக்கோள்...
உன் பெயரில் என் பெயரையன்றி வேறொரு பெயரை எழுதாதே!
அதிஷ்டம் என் வாசல் பக்கம் வந்து கண் சிமிட்டுகிறது...
உன் முகம் காண...உன் குரல் கேட்க...
கடவுள் மீது நம்பிக்கை கூடிப்போகிறது...
நிம்மதியாய் மூச்சுவிடுகிறேன் உன் வீட்டு அழைப்பிதழை நெஞ்சில் அணைத்தவாறு...
ஆனாலும் ஆண்டவனுக்கு அன்பாய் ஒரு வேண்டுக்கோள்...
உன் பெயரில் என் பெயரையன்றி வேறொரு பெயரை எழுதாதே!
அதிஷ்டம் என் வாசல் பக்கம் வந்து கண் சிமிட்டுகிறது...
உன் முகம் காண...உன் குரல் கேட்க...
1 comment:
நன்றாக இருக்கு கவிதை ;))
\\அந்த பிஞ்சு மழையின் விளையாட்டில் நனைந்துருகி என் நெஞ்சம்
நெகிழ்கிறேன்...இதைவிடவா ஒரு ஆறுதல் வேண்டும்?
கடவுள் மீது நம்பிக்கை கூடிப்போகிறது... \\
ரசித்தேன்..
இந்த word verification வேண்டாமே அதை துக்கிடுங்க ;)
Post a Comment