Saturday, June 06, 2009

உன்னைச் சரணடைந்தேன் மன்னவா!

உன்னைச் சரணடைந்தேன் மன்னவா! மன்னவா! இன்னும் ஒரு தேவை சொல்லவா சொல்லவா... இந்த அழகிய நிமிஷம் இது வளர்ந்திட வேண்டும் இது முடிகிற நேரம் உயிர் விட வேண்டும்! உடலும் மனமும் உனையேத் தொடர... உன்னைச் சரணடைந்தேன் மன்னவா! மன்னவா! காற்றுவெளி மின்மினியாய் கண்கள் வழி நீ வந்தாய்! நான் எழுதும் மேஜையிலே எரியும் விளக்காய் ஒளிருகிறாய்! ம்ம்...எனது விரல் நீ பிடித்து உயிரெழுத்தை எழுதுகிறாய்! துணையெழுத்து நீயாக உறவின் வயதை உயர்த்துகிறாய்! உன் வெள்ளி மனம் பொன் மஞ்சள் நிறம் நான் என்னை வரைந்தேன்! நான் செய்த தவம் நீ தந்த வரம் நான் உன்னை அடைந்தேன்! அந்த சங்கீத சந்திப்பில் சந்தோஷ தித்திப்பில் ஒரு துளி மழையென மடியினில் விழுந்தேன்! உன்னைச் சரணடைந்தேன் மன்னவா! மன்னவா! தேய்ந்து வரும் வான்மதியாய் நேற்று வரை வாழ்ந்திருந்தேன் இன்று உந்தன் திருமதியாய் உனது நினைவில் வளருகிறேன் பூவில் விழும் பனித்துளியாய் மனதில் உனை நான் சுமந்தேன் நீ கொடுத்த கனவுகளை எனது விழியில் வாங்குகிறேன் உன் பார்வைகளில் உன் ஸ்பரிசங்களில் நான் என்னை அறிந்தேன் உன் பூவிதழில் உன் புன்னைகையில் நான் இடறி விழுந்தேன் இங்கு உன் வாசம் என்னோடு என் வாசம் உன்னோடு தொலைந்திட சிறகென காற்றினில் மிதந்தேன் உன்னைச் சரணடைந்தேன் மன்னவா! மன்னவா! இன்னும் ஒரு தேவை சொல்லவா சொல்லவா... இந்த அழகிய நிமிஷம் இது வளர்ந்திட வேண்டும் இது முடிகிற நேரம் உயிர் விட வேண்டும் உடலும் மனமும் உனையேத் தொடர உன்னைச் சரணடைந்தேன் மன்னவா! மன்னவா! நீண்ட நாட்களாக போட நினைத்த பதிவு....கொஞ்சம் பழைய ஆனால் இனிமையான பாடல்... ஹரிஷ் ராகவேந்திராவின் குரல் பனிக்கூழில் நனையும் சுகம்..இப்போதைக்கு ஐஸ்கிரிம் சாப்பிட முடியாவிட்டாலும்...காய்ச்சல்தான் இன்னமும் சரியாகலையே :-( பாடலையாவது கேட்டு இரசிக்கிறேன்... :-) 

4 comments:

Poornima Saravana kumar said...

நல்ல பாடல் புனிதா:)

நட்புடன் ஜமால் said...

முதல் இரு வரிகள் படித்து

நீங்க எழுதிய கவிதைன்னு நினைச்சு போட்டேன் போங்கோ ...

butterfly Surya said...

thanx for sharing.

Killivalavan said...

அருமையான பாடல்