உன் கண்ணீர்
என் கை உதிராமல் சேமிக்கப்பட்டிருந்தால்,
நெஞ்சைக் கொல்லும் துரோகத்திலிருந்து
மன்னிக்கப்பட்டிருக்கலாம்...
ஒரு வேளை மறக்கப்பட்டிருக்கலாம்...
09.01.2017
Monday, January 30, 2017
நிகழப்போவதில்லை
இனி ஒரு போதும் நிகழப்போவதில்லை
வார்த்தைகள் கொண்ட உரையாடல்...
நீ அருந்தும் தேநீரில் ஒட்டிக்
கொள்ளும் உதட்டோடு முடிந்துவிடும்
இனி ஒரு புன்னகையோ
இல்லை உதட்டுச்சுளிப்போ!!!
08.01.2017
வார்த்தைகள் கொண்ட உரையாடல்...
நீ அருந்தும் தேநீரில் ஒட்டிக்
கொள்ளும் உதட்டோடு முடிந்துவிடும்
இனி ஒரு புன்னகையோ
இல்லை உதட்டுச்சுளிப்போ!!!
08.01.2017
Wednesday, July 22, 2015
என்றேனும் வாசிக்கப்படலாம்...
இது உனக்கான வாழ்த்தென்று!!!
உன்னோடு சேர்ந்து
நடந்த கடற்கரை மணலில்
சில லட்சம் மட்டும்
சேமித்து வைத்துள்ளேன்
உன் நினைவுகளின்
இம்சையில் சிலிர்த்தெழும்
சில கவிதைகளுக்காய்...
22.07.2012
உன்னோடு சேர்ந்து
நடந்த கடற்கரை மணலில்
சில லட்சம் மட்டும்
சேமித்து வைத்துள்ளேன்
உன் நினைவுகளின்
இம்சையில் சிலிர்த்தெழும்
சில கவிதைகளுக்காய்...
22.07.2012
Monday, July 20, 2015
அபத்தங்கள்
பிரிவை உணரா பிரியமொன்று
கனவுகளின் அபத்தங்களைச்
சொல்லிக் கொண்டிருக்கிறது!!!
....................................................
எனக்கான உன் கோபங்கள்
மௌனங்களாய் சிறகு விரிக்கையில்
உனக்கான கவிதையொன்றை
ப்ரியங்களால் கிறுக்கி வைக்கிறேன்!!
உன் மௌனத்தை
மொழிப்பெயர்க்கும் இரகசியம்
அந்த கவிதைகளுக்கும் தெரியும்!!
கனவுகளின் அபத்தங்களைச்
சொல்லிக் கொண்டிருக்கிறது!!!
....................................................
எனக்கான உன் கோபங்கள்
மௌனங்களாய் சிறகு விரிக்கையில்
உனக்கான கவிதையொன்றை
ப்ரியங்களால் கிறுக்கி வைக்கிறேன்!!
உன் மௌனத்தை
மொழிப்பெயர்க்கும் இரகசியம்
அந்த கவிதைகளுக்கும் தெரியும்!!
அ-கவிதை
நேரமாகிவிட்டது
வீடு செல்லுங்கள்
என்று சொல்கிற
அலுவலகங்கள் உள்ளவரை
வாழ்க்கை
சுவாரஸ்யமானதுதான்!!! அ-கவிதை
வீடு செல்லுங்கள்
என்று சொல்கிற
அலுவலகங்கள் உள்ளவரை
வாழ்க்கை
சுவாரஸ்யமானதுதான்!!! அ-கவிதை
பழையன கழிதலும்...புதியன புகுதலும்
இது ஓசைகளின் நெடுஞ்சாலை…பிம்பங்களின் நெடுஞ்சாலை…படிமங்களின் நெடுஞ்சாலை…இங்கே புத்தரைத் தேடும் அந்தரங்கமான…மௌனமான தேடல்…சொற்கள் அமர்ந்து நீங்கிய இடத்தில் எஞ்சும் மெல்லிய தடங்களால் அந்தரங்கமான வலிகளால் தனக்குத்தானேகூட சொல்லிக் கொள்ள தயங்கும் உவகைகளால்…!
ஜெயமோகன் – ‘நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்’முன்னுரையிலிருந்து..
இது ‘நான்’ என்ற சுயத்தின் திசையறுக்கும் தேடல்…இது இவளின் முதல் வரியல்ல… முகவரி!!
இது ‘நான்’ என்ற சுயத்தின் திசையறுக்கும் தேடல்…இது இவளின் முதல் வரியல்ல… முகவரி!!
PC: Google
Monday, December 06, 2010
மெதுவா மெதுவா - பிரிவோம் சந்திப்போம்
கடன் தருவதற்கே உனை நான் தொடர்ந்தேன்
முதல் தவணையிலே முழுதாய் இழந்தேன்
நம்மைபோல் வேறு ஒரு நாம் இல்லை இனி...
Subscribe to:
Posts (Atom)
