Thursday, November 25, 2010

ம்ம்ம்

மௌனங்கூட விரதம் கலைக்கிறது நீ வந்து பேசும் தருணத்தில்...

************
நீ ‘தா’வெணும் போதெல்லாம் யோசிக்காமலே தந்துவிடுகிறேன் ஆனால் நீயோ வெட்கங்களை மட்டுமே பதிலாய் தந்துச் செல்கிறாய்... நீ அடப்பாவியா இல்லை நான் அப்பாவியா?! ஐவிரல்களில் சிறு நடுக்கம் இதயத்திலோ புது மயக்கம் உன்னை உரையாடியில் காணும் பொழுதுகளில்...

யாரிடமும் எனக்கு கெஞ்சப் பிடிக்காது
நீ உள்பட என்று கோபமாய்
முகம் திருப்பிய பொழுதினில் அடியே லூசு..உனைக் கொஞ்சத்தானே சொன்னேன் என்று பதிலுக்கு நீயும் முறைத்துக் கொள்கிறாய்...

**************************
நான் கவிதையெழுதியிருக்கிறேன் உனக்கு மொழிபெயர்த்து காட்டவா என்றேன் ஆவலாய்...ஏதும் பேசாது தவிக்க விட்டுச் சென்றாய் அந்நாள் முழுவதுமாய் மறுநாள் அதிகாலையெழுப்பி ஏதோ உளறினாய்... ஏதும் புரியாது முழிக்கும் போதே இது ‘தமிழ்’ உன் அத்தையிடம் கெஞ்சிக் கற்றேன் என்கிறாய் அப்பாவியாய்.. ச்சே.. போடா மொழிகள் தேவையில்லை நம் காதலுக்கு...

தமிழில் எதுவுமே பேசத்தெரியாது
என்று பொய் சொல்லாதே என்கிறேன் கிண்டலாய்.. ஆமாம் உன்னை ‘டீ’ போடத் தெரியும் என்கிறாய் வெட்கத்தோடு ம்ம்ம் ஆண்கள் வெட்கப்படும் தருணம் இதுதானா? ;-)

*********************
நீ வந்துச் சென்றதின் அடையாளமாய் உன் நினைவுகள்
என் உரையாடல் பெட்டகத்தில் நொடிக்கொருதரம் என் கண்கள் தீண்டிச் செல்கிறது.. அடுத்த நினைவுகளை சேகரிக்கும் வரை...