
என்று உன் இதயம் விழித்துக் கொள்ளுமோ
அன்று உயிர்த்திடு உயிர்த்துடிப்பே
என்று உன் கண்கள் உண்மை சொல்லுமோ
அன்று மலருக கனவுகளை
என்று உன் இதழ்கள் கொஞ்சிப் பேசுமோ
அன்று இனித்திடு தாய்மொழியே
என்று உன் கால்கள் என்னைத் தேடுமோ
அன்று வழிவிடு சாலைகளே
என்று உன் உயிரினில் ஜீவன் கசியுமோ
அன்று விழித்திடு கல்லறைகளே
என்று உன் ஆவி என்னைச் சேருமோ
அன்று மரித்திடு உன் நினைவுகளை...
No comments:
Post a Comment