
உன் பெயரை வாசிக்கும் வரை அறியவில்லை...
இனி நான் சுவாசிக்கும் வேதம் உன் பெயரைன்று...
உன் முகம் காணும் வரை அறியவில்லை...
இனி நான் காண விரும்புவது உன் முகம் மட்டுமென்று...
உன் குரல் கேட்கும் வரை அறியவில்லை...
இனி நான் இசைக்கும் கீதம் உன் குரலென்று...
உன் ஸ்பரிசம் உணரும் வரை அறியவில்லை...
இனி நான் உயிர்ப்பது உன் தொடுகையிலென்று...
உன் பார்வை புரியும் வரை அறியவில்லை...
இனி என் உலகம் உன் பார்வையிலென்று...
உன் இதயத்துடிப்பை உணரும் வரை அறியவில்லை...
இனி நான் வாழ்வது உன் உயிர்த்துடிப்பிலென்று...
உன் தோள்களில் என் முகம் சாயும்வரை அறியவில்லை...
இனி நான் வாழ்வது உனக்காகவென்று....!
No comments:
Post a Comment