Sunday, January 20, 2008

பிடிக்கும் என்றதால்


மழை பிடிக்கும் என்றதால்...
நீ மழையோடு கைக்கோர்க்கும் போதும், ரோஜா பிடிக்கும் என்றதால்... நீ முட்களோடு சண்டையிடும் போதும், புத்தகம் பிடிக்கும் என்றவுடன்... நூலகம் உன் புகுந்த வீடான போதும், கனவு பிடிக்கும் என்றதால்... நீ எனக்காக உறங்கும் போதும், உன் இயல்பையெல்லாம் எனக்காக விட்டுக் கொடுக்கும் போதும்... ஏனோ எனக்குள் எஞ்சியவை... வெறுமை மட்டுமே... வெறுமை மட்டுமே...!

3 comments:

நாமக்கல் சிபி said...

/உன் இயல்பையெல்லாம் எனக்காக விட்டுக் கொடுக்கும் போதும்...

ஏனோ எனக்குள் எஞ்சியவை...

வெறுமை மட்டுமே... வெறுமை மட்டுமே...!

//

:((

புதுவிதமான கவிதை!
அதில் கடைசியில்
ஏனோ கவலை!

Anonymous said...

:( இதுதான் நிஜம் சிபி. நன்றி உங்கள் வருகைக்கு..

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

VERY NICE,,......