Tuesday, September 02, 2008

ஐயோ...ஐயோ...ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு!


படம் : பொய் சொல்லப் போறோம்
பிண்ணனி குரல் : ஷ்ரேயா கோஷல்
Listen to Poi Solla Porom - tamil Audio Songs at MusicMazaa.com

ஒரு வார்த்தைப் பேசாமல்
ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் ஏதோ செய்யுதடா

புயல் காற்று வீசாமல்
பூகம்பம் இல்லாமல்
என் நெஞ்சம் உன்னிடம் சாயுதடா

நான் நில் நில் நில் என்றாலும் என் மனம் கேட்கவில்லை
தினம் சொல் சொல் சொல் என்றாலும் என் உதடுகள் பேசவில்லை
ஆனால்கூட ஐயோ இந்த அவஸ்தைகள் பிடிக்குதடா

ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு

ஒரு வார்த்தைப் பேசாமல்
ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் ஏதோ செய்யுதடா

போ போ போ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று
தூக்கம் இல்லை நெடுநாள் என்று சொல்வாயோ
போ போ போ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று
தூக்கம் இல்லை நெடுநாள் என்று சொல்வாயோ
இமைகள் ரெண்டும் மூடும்போதும் உன்னை யோசிக்க
என் இதயம் இன்னும் புத்தகம் நடுவே நாளா வாசிக்க

சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா
கண்கள் பேசும் பாஷைகள் உனக்கு கண்ணா புரியாதா

ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு

ஒரு வார்த்தைப் பேசாமல்
ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் ஏதோ செய்யுதடா

போ போ போ எந்தன் பகலே நீயும் அவனிடம் சென்று
வெளிச்சம் இல்லை வெகுநாள் என்று சொல்வாயோ
போ போ போ என் பகலே நீயும் அவனிடம் சென்று
வெளிச்சம் இல்லை வெகுநாள் என்று சொல்வாயோ
காற்றைக் கேட்டு பூக்கள் எல்லாம் வாசம் தருகிறதா
கடிதம் போட்டு கடலைத் தீண்டி நதிகள் வருகிறதா
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா
கண்கள் பேசும் பாஷைகள் உனக்கு கண்ணா புரியாதா

ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு

ஒரு வார்த்தைப் பேசாமல்
ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் ஏதோ செய்யுதடா

புயல் காற்று வீசாமல் பூகம்பம் இல்லாமல்
என் நெஞ்சம் உன்னிடம் சாயுதடா

நான் நில் நில் நில் என்றாலும் என் மனம் கேட்கவில்லை
தினம் சொல் சொல் சொல் என்றாலும் என் உதடுகள் பேசவில்லை
ஆனால்கூட ஐயோ இந்த அவஸ்தைகள் பிடிக்குதடா

ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு

ஒரு வார்த்தைப் பேசாமல்
ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் ஏதோ செய்யுதடா

8 comments:

Unknown said...

பாட்டா?? நான்கூட நீங்க நிஜமா எதோ சொல்றீங்கன்னு நினைச்சு வந்தேன் அக்கா..!! :))

MyFriend said...

ஐயய்யோ.. உங்க காதல் கதை சொல்லுவீங்கன்னு வந்து பார்த்தா பொய் சொல்லிட்டீங்க.. அட.. அதானே படத்தோட பேரு. ;-)

ஆதவன் said...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாங்கள் வெளியிட்டுள்ள எலியன்(mouse) பிள்ளையார் படத்தைத் தவிர்த்திருக்கலாம். கடவுளராக மதிக்கப்படுகின்ற ஒன்றை அளவுக்கு அதிகமான அன்பின் காரணமாக அல்லது பத்தியின் காரணமாக அல்லது அலட்டிக்கொள்ளாத பண்பின் காரணமாக இழுவுபடுத்துவதை வரவேற்கக்கூடாது. இது அன்பான வேண்டுகோள்தான் இனியவள் புனிதா.

Anonymous said...

//Sri said...
பாட்டா?? நான்கூட நீங்க நிஜமா எதோ சொல்றீங்கன்னு நினைச்சு வந்தேன் அக்கா..!! :))//

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஐயய்யோ.. உங்க காதல் கதை சொல்லுவீங்கன்னு வந்து பார்த்தா பொய் சொல்லிட்டீங்க.. அட.. அதானே படத்தோட பேரு. ;-)//

:-) பாட்டு பிடிச்சிருக்கான்னு இன்னமும் சொல்லவே இல்லை?

Anonymous said...

//ஆய்தன் said...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாங்கள் வெளியிட்டுள்ள எலியன்(mouse) பிள்ளையார் படத்தைத் தவிர்த்திருக்கலாம். கடவுளராக மதிக்கப்படுகின்ற ஒன்றை அளவுக்கு அதிகமான அன்பின் காரணமாக அல்லது பத்தியின் காரணமாக அல்லது அலட்டிக்கொள்ளாத பண்பின் காரணமாக இழுவுபடுத்துவதை வரவேற்கக்கூடாது. இது அன்பான வேண்டுகோள்தான் இனியவள் புனிதா.//

ரொம்பவும் Cuteஆ இருந்ததால் போட்டுவிட்டேன். உண்மையில் வருந்துகிறேன்...:-( உணர வைத்தமைக்கு நன்றிங்க!

Unknown said...

வார்த்தைகள் பிடிச்சிருக்கு..:) ஆனா இன்னும் கேட்கல.. சோ கேட்டுட்டு சொல்றேன்..!! :P

சென்ஷி said...

//Sri said...
வார்த்தைகள் பிடிச்சிருக்கு..:) ஆனா இன்னும் கேட்கல.. சோ கேட்டுட்டு சொல்றேன்..!! :P
//

repeatey :)

Anonymous said...

சென்ஷி said...
//Sri said...
வார்த்தைகள் பிடிச்சிருக்கு..:) ஆனா இன்னும் கேட்கல.. சோ கேட்டுட்டு சொல்றேன்..!! :P
//

repeatey :)

Thanks