Wednesday, July 09, 2008

உன்னால்தான்.......


என் இதழ் வியர்க்கும் தருணங்கள்
உன்னால்தான் உண்டானது
என் இதயம் துடிக்கவும்
உன்னிடம்தான் கற்றுக் கொண்டது
என் மௌனங்களும் உன்னால்தான்
மறுமொழியாகின்றன
மொத்தமாய் உன்னால்தான்
நான் நானாகிறேன்
எல்லாமும் நீயென்றால்
உன் விரல் தீண்டி
நான் உயிர் பெறுவேனோ
இல்லை உன் நினைவாலே
உயிர் விடுவேனா?

12 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

நல்ல வரிகள்... அருமை... வாழ்த்துக்கள்...

Unknown said...

Arumaiyaana varigal..!! :-)

கோபிநாத் said...

அழகான வரிகள்....சூப்பர் ;)

Divya said...

அழகான வரிகளுடன் அருமையான கவிதை புனிதா:)
மிகவும் ரசித்தேன்!!

ramesh sadasivam said...

நல்ல கவிதை. ஏக்கத்தை அருமையாக உணர்த்தியுள்ளீர்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

பின்னூட்டத்திற்கு மறுமொழி இடாததை வன்மையாக கண்டிக்கிறேன்...

Anonymous said...

@ VIKNESHWARAN
@ sri
@ கோபிநாத்
@ divya
@ shri ramesh sadasivam

வருகைக்கும் தருகைகும் மிக்க நன்றி :P

anujanya said...

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

ஏம்பா விக்கி, இப்பிடி கேட்டு வாங்கணுமா. நீங்கள் போகாத வலைப்பூ உள்ளதா?

anujanya said...
This comment has been removed by the author.
Anonymous said...

//அனுஜன்யா said...
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா //

நன்றி அனுஜன்யா...ஆனா ஏதோ நிறைவு இல்லாததை போன்ற உணர்வு :(

//ஏம்பா விக்கி, இப்பிடி கேட்டு வாங்கணுமா. நீங்கள் போகாத வலைப்பூ உள்ளதா?//

:))

தினேஷ் said...

அழகான வரிகளில் காதல்...

தினேஷ்

Anonymous said...

//தினேஷ் said...
அழகான வரிகளில் காதல்...

தினேஷ்//

நன்றி தினேஷ்...தங்களின் முதல் வருகைக்கும் தருகைக்கும்!