Sunday, September 20, 2009

கவிதையைப் போல்!!!!

முற்றுப் பெறும்
எல்லா கணங்களையும்
அவனுக்காய் சேர்த்து வாழும் அவள்,
அவன் கவிதைகளில் கூடு கட்டி
மேகம் வரைந்திருந்தாள்....

மேகங்கள் கரையும்
ஒரு மழைக்காலத்தில்
அவளுக்காய் அவன்
விதைத்துச் சென்ற
கவிதைப் பூக்கள்
காய்ந்துப் போயிருந்தன...

மேகங்களை அவன் தேடிச்
சேர்க்கும் முன்பே
அவள் தொலைந்துப் போயிருந்தாள்
கரைந்துப் போன
அவனுடைய கவிதையைப் போல்!!!!

22 comments:

Anonymous said...

vaalvin karpithangkal pala valikalil ennai vanthu adaikinrana.. athil punithaavin kavithaikal en unarvukalai eluppi vidukinrana. nanri punitha.. naan niraya elutha vendum ungalaip patri.. en computere l tamil vasathi seithu kondu ungalukku virivaana madal onru eluthukiren.

தாரணி பிரியா said...

//முற்றுப் பெறும்
எல்லா கணங்களையும்
அவனுக்காய் சேர்த்து வாழும் அவள்//

பழசு எல்லாம் நினைவுல வந்துட்டது புனிதா

Unknown said...

//மேகங்கள் கரையும்
ஒரு மழைக்காலத்தில்
அவளுக்காய் அவன்
விதைத்துச் சென்ற
கவிதைப் பூக்கள்
காய்ந்துப் போயிருந்தன...//

அழகான முரண்... :)) கவிதை அருமை.. :))

Unknown said...

//தாரணி பிரியா கூறியது...
//முற்றுப் பெறும்
எல்லா கணங்களையும்
அவனுக்காய் சேர்த்து வாழும் அவள்//

பழசு எல்லாம் நினைவுல வந்துட்டது புனிதா//

அந்த நாள் ஞாபகம்?? ;)) ம்ம்ம் கலக்குங்க அக்கா...

Anonymous said...

//தாரணி பிரியா கூறியது...
//முற்றுப் பெறும்
எல்லா கணங்களையும்
அவனுக்காய் சேர்த்து வாழும் அவள்//

பழசு எல்லாம் நினைவுல வந்துட்டது புனிதா//

Wow... ninaithalae Inikutha Priya??? :-))

Anonymous said...

//ஸ்ரீமதி கூறியது...
//மேகங்கள் கரையும்
ஒரு மழைக்காலத்தில்
அவளுக்காய் அவன்
விதைத்துச் சென்ற
கவிதைப் பூக்கள்
காய்ந்துப் போயிருந்தன...//

அழகான முரண்... :)) கவிதை அருமை.. :))//

Thanks Chellam :-))

Anonymous said...

wow soooper kavithai..
கற்பனை உருவகம் எல்லாமே அழகு

Several tips said...

மிகவும் நன்று

R.Gopi said...

இந்த‌ அருமையான‌ க‌விதையை ஏன் க‌விதையை போல் என்கிறீர்க‌ள்...

மிக‌ மிக‌ தைரிய‌மாக‌ க‌விதை என்றே சொல்ல‌லாம்...

ஏன்னா, அவ்ளோ ந‌ல்லா இருக்கும்...

இப்போதான் முதன் முதலில் இங்கு வருகிறேன்... இனி தொடர்ந்து வருவேன்...

வாழ்த்துக்கள் கவிதாயினி புனிதா...

நேரமிருப்பின் வருகை தரலாம்...

www.edakumadaku.blogspot.com

www.jokkiri.blogspot.com

Dinesh C said...

:) Nalla irukku

சந்தான சங்கர் said...

கரைந்து போன
கவிதை
நிறைந்துவிட்டது
எல்லோர்மனதிலும்..

நல்ல கவிதை .. வாழ்த்துக்கள்.

Admin said...

நல்ல வரிகள்

Anonymous said...

@பதுமை
@Several tips
@R.Gopi
@Dinesh C
@சந்தான சங்கர்
@சந்ரு

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க :-))

து. பவனேஸ்வரி said...

சோகம் இழையோடுகிறதே அக்கா... :(

sivanes said...

கவிதை அருமை, வரவுக்கு வாழ்த்துக்கள்...! இதுபோல் மேலும் சிறந்த படைப்புகள் பல தருக தோழி...!

Sanjai Gandhi said...

அடடா அடடா அடடாஆஆஆ.. எனை ஏதோ செய்யுதே.. :))

Ungalranga said...

oops..!!

துவக்கம் முதல் கடைசி வரி வரை காதலும் தமிழும் கலந்து கட்டி களியாட்டம் போட்டு..இறுதி வரிகளில் இதயம் தொட்டு சென்றது..


அழகு.. மேலும் மேலும் எழுதுங்கள்..

கவிதை.. மனிதர்கள் அனைவருக்குமான குழந்தை..!!

முனைவர் இரா.குணசீலன் said...

ஈரமான நினைவுகள்

மௌனமாய் உறைந்து விழிகள் நிறைக்கின்றது கவிதையாய்!!!

உண்மை தான் உங்கள் ஒவ்வொரு கவிதைகளிலும் ஈரமான நினைவுகளை உணரமுடிகிறது.

ப்ரியமானவள் said...

பெண்களே.. இதுவும் சரிதானே

பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

ராகவன் said...

அன்பு புனிதா,

அழகான கவிதை! அசத்தலான ஆரம்ப வரிகள், கவிதைக்குள்ளே வழுக்கிச் செல்ல வைக்கிறது.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ராகவன்

தமிழ் அஞ்சல் said...

நல்ல கவிதை..!

priyamudanprabu said...

மேகங்களை அவன் தேடிச்
சேர்க்கும் முன்பே
அவள் தொலைந்துப் போயிருந்தாள்
கரைந்துப் போன
அவனுடைய கவிதையைப் போல்!!!!
///


நல்லாயிருக்கு