பிரிவை உணரா பிரியமொன்று
கனவுகளின் அபத்தங்களைச்
சொல்லிக் கொண்டிருக்கிறது!!!
....................................................
எனக்கான உன் கோபங்கள்
மௌனங்களாய் சிறகு விரிக்கையில்
உனக்கான கவிதையொன்றை
ப்ரியங்களால் கிறுக்கி வைக்கிறேன்!!
உன் மௌனத்தை
மொழிப்பெயர்க்கும் இரகசியம்
அந்த கவிதைகளுக்கும் தெரியும்!!
No comments:
Post a Comment